நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னையில் நேற்று நடந்த ராஜபுத்திரன் பட விழாவில், அதில் அப்பா கேரக்டரில் நடித்த பிரபு கலந்து கொண்டார். அவருக்கு சற்றே உடல்நலம் சரியில்லை என்றாலும், அதை பொருட்படுத்தாமல் மேடை ஏறியவர், படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவர் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இதுவரை தான் 74 புதுமுக இயக்குனர் படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் வெற்றி அப்பாவாக வருகிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள், எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது. இதில் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்றேன். ஆனாலும் ஆட வைத்துவிட்டார்கள். அந்த குத்து பாடலை அண்ணன் டி.ஆர். பாடியிருக்கிறார். அவருக்கு நன்றி.
நானும் சின்னபசங்க மாதிரி ஆகிவிட்டேன். இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. இதில் புதுமுக கிருஷ்ணபிரியா ஹீரோயின். அவர் பாடல்கள் அருமை. கதைப்பபடி எனக்கும், அவருக்கும்தான் சண்டை, இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா, என் மீது, என் மகன் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இதில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குனர்கள் காமெடியன், குணசித்திர கேரக்டருக்கு மாறிவிட்டார்கள்'' என்றார்.