இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
இயக்குனர் சேரன் நரிவேட்டை என்ற மலையாள படத்தில் சற்றே வில்லத்தனமான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த அந்த படம் தமிழிலும் டப்பாகி நேற்று வெளியாகி உள்ளது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டொவினா. அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பது கதை. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சற்றே நெகட்டிவ் ரோலில் சேரன் நடித்த படம் இது. எப்படி நடிச்சீங்க என்றால், ‛இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர், அவரின் அடுத்த படம் இது. என் கேரக்டர் பிடித்து இருந்தது. தவிர, படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால், நரிவேட்டையில் அப்படி நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்ந்தெடுத்தார். இதே தேதியில் என்னுடைய ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் ஆக இருந்தது. ஒரே நேரத்தில் 2 போட்டி வேண்டாம் என்று, அந்த பட தேதியை ஒத்தி வைத்துவிட்டேன்' என்கிறார்.