இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மைனா படத்தில் நல்ல போலீசாக நடித்த சேது ஹீரோவாக நடித்துள்ள படம் மையல். இந்த படத்தை பிரபுசாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கி உள்ளார். சம்ரிதிதாரா ஹீரோயின். ஒரு கிராமத்து காதல் கதையாக படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு பிரபல எழுத்தாளரான, பல முன்னணி படங்களில் பணியாற்றிய ஜெயமோகன் கதை வசனம் எழுதியிருக்கிறார். நேற்று வெளியான இந்த படத்துக்கு வெறும் 37 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க படக்குழு பெரும் சோகத்தில் இருக்கிறது. முதலில் 75க்கும் அதிகமான தியேட்டர்கள் தருவதாக சொன்னார்கள். கடைசியில் 37 தியேட்டர்தான் கொடுத்து இருக்காங்க. அதிலும் நல்ல காட்சிகள் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்த நிலை என்று படக்குழுவினர் பொங்குகிறார்கள். தமிழில் முன்னணி எழுத்தாளர் எழுதிய கதைக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டிலும் சலசலப்பு நிலவுகிறது.