டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
அந்த காலத்தில் நல்ல படங்கள் என்றால் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும், புதுமுகங்கள் இயக்கி இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவது இயக்குனர் கே. பாலசந்தர் பாணி. பலருக்கு தன் கைப்பட பாராட்டு கடிதமும் எழுதி அனுப்புவார். அதை அவர் சிஷ்யன் ரஜினிகாந்த் இப்போது அந்த நல்ல பழக்கத்தை கடை பிடிக்கிறார்.
சின்ன படங்கள் என்றாலும் படம் நன்றாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து தனது ஸ்டைலில் புகழ்ந்து தள்ளி பாராட்டுகிறார். அந்தவகையில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்தவர் சசியை பாராட்டியிருக்கிறார். இதை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் சசிகுமார்.
அதில், ‛‛ 'படம் சூப்பர்' என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் பேமிலி' படம் பார்த்து, "சூப்ப்ப்பர் சசிகுமார்..." என அழுத்திச் சொன்னார்.
"தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்..." என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 'டூரிஸ்ட் பேமிலி' படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்...!''
இவ்வாறு சசிகுமார் பதிவிட்டுள்ளார்.