தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் தன்னை சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்வார். அழகி போட்டிகளும் நடத்தினார். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பாக எதையாவது பேசியும், வீடியோவும் வெளியிடுவார். அது ஒரு நாள் எல்லை மீறி அவரை சிக்கலில் மாட்ட வைத்தது.
பட்டியலின மக்கள் குறித்து அவர் அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வெளியானது. இதை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது நபரான சாம் அபிஷேக், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த நிலுவையில் இருப்பதால் வழக்கை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும். குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.