காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நடிகர் சூர்யா மற்றும் பாலா இருவரும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் டிராப் ஆகி விட்டது என்று கூட சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் சூர்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யா தற்போது பாலா படத்தின் ஷூட்டிங்கை மேலும் தள்ளிப்போட்டிருக்கிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் பாலா பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பாராம். கோவாவில் அடுத்தகட்ட ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




