பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

1980களில் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா போன்றவர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் இவர்களுக்கு நிகராக கன்னட சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் பாவ்யா.
அன்றைக்கு இருந்த முன்னணி கன்னட நடிகர்கள் இவரது தேதிக்காக காத்திருந்தார்கள். விஷ்ணுவர்த்தன் உடனும், அம்பரீஷ் உடனும், ராஜ்குமாருடனும், அதிக படங்களில் நடித்தார். 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்த பாவ்யா இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.
1985ம் ஆண்டு வெளிவந்த ' கீதாஞ்சலி' படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். அதே ஆண்டில் 'ஜனனி' படத்தில் உதயகுமார் என்ற புதுமுகம் ஜோடியக நடித்தார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றாலும் அவர் கைவசம் ஏராளமான கன்னட படங்கள் வைத்திருந்ததால் தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.
ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் குணசித்ர வேடங்களில் நடித்த பாவ்யா, பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.