ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியிருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு முன்பு எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும், வாடி பொட்ட புள்ள வெளியே உள்ளிட்ட சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கும் வடிவேலு இதுபோன்று டிராப் சாங் பாடியதில்லை. முதன்முறையாக ஒரு புதிய முயற்சியை இந்தப் படத்தில் அவர் எடுத்துள்ளார். இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.