பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மவுனம் கலைத்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டியில் திருமணம் பற்றிய கேள்விக்கு கூறியிருப்பதாவது, எந்த விஷயத்தை எப்ப சொல்லணுமோ அப்பப்ப சொல்லுவோம். ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் அதைக் கண்டிப்பா சொல்றோம். அதான் எங்கே போனாலும் டுவிட்டரில் பகிந்து கொள்கிறோமே, நாங்க எப்பவும் ரகசியமா இல்லையே! கல்யாணம் செய்யத்தான் வேணும். நடக்கும்போது சொல்றோம் என்றார்.




