மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? |

சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் அவரது 20வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் தற்போது முக்கிய இசையமைப்பாளராக உயர்ந்துள்ள தமன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த கூட்டணி குறித்து தமன், “எனது நெருங்கிய நண்பன், கிரிக்கெட்மேட் சிவாவுடன் முதல் முறை இணையும்” என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இன்று படம் பற்றி மேலும் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார் தமன்.
“நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக சிரித்த முதல் இரவு. இந்த பூமியில் உள்ள அறிவுள்ள மனிதர்களில் டைமிங்கில் நிறையவற்றைக் கொடுக்கும் டார்லிங்ஸ் உடன்,” என சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.