கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் அவரது 20வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் தற்போது முக்கிய இசையமைப்பாளராக உயர்ந்துள்ள தமன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த கூட்டணி குறித்து தமன், “எனது நெருங்கிய நண்பன், கிரிக்கெட்மேட் சிவாவுடன் முதல் முறை இணையும்” என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இன்று படம் பற்றி மேலும் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார் தமன்.
“நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக சிரித்த முதல் இரவு. இந்த பூமியில் உள்ள அறிவுள்ள மனிதர்களில் டைமிங்கில் நிறையவற்றைக் கொடுக்கும் டார்லிங்ஸ் உடன்,” என சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.