ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா |
2022ம் ஆண்டு கொரோனா மூன்றாவது அலையுடனே ஆரம்பமாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவில்லை என்பதால் தற்போது தியேட்டர்கள் கிடைக்க அதிக வாய்ப்பு.
தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களிலும் 'வலிமை' படத்தை வெளியிட வாய்ப்பில்லை. படம் வெளிவரும் பட்சத்தில் 600 தியேட்டர்கள் வரை வெளியாக வாய்ப்புள்ளது. மீதியுள்ள 400 தியேட்டர்களில் 300 தியேட்டர்களிலாவது மற்றொரு முக்கிய படத்தை வெளியிட தியேட்டர்கள் கிடைக்கும்.
அதனால், விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியானது. அந்தத் தகவல் வெறும் தகவல்தானே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. ஒரு படத்தின் சென்சார் முடியாமல் அதன் வெளியீட்டுத் தேதியை விளம்பரங்களில் குறிப்பிட முடியாது. எனவே, படத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை படத்தின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேதியுடன் வெளியிடவில்லை.
சென்சார் வேலைகள் முடிந்தால் மட்டுமே அவர்கள் தேதியுடன் அறிவிப்பை வெளியிடுவார்கள். சமூக வலைத்தளங்களில் மட்டும் படம் பொங்கல் வெளியீடு என தகவலைப் பரப்பி வருகிறார்கள்.