'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மவுனம் கலைத்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டியில் திருமணம் பற்றிய கேள்விக்கு கூறியிருப்பதாவது, எந்த விஷயத்தை எப்ப சொல்லணுமோ அப்பப்ப சொல்லுவோம். ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் அதைக் கண்டிப்பா சொல்றோம். அதான் எங்கே போனாலும் டுவிட்டரில் பகிந்து கொள்கிறோமே, நாங்க எப்பவும் ரகசியமா இல்லையே! கல்யாணம் செய்யத்தான் வேணும். நடக்கும்போது சொல்றோம் என்றார்.