பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணுமஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர். இதையடுத்து பல அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளையும் அவர்கள் போட்டி போட்டு அறிவித்து வந்தனர்.
அதையடுத்து, விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ்ராஜை கன்னடர் என்று கொடி பிடித்தார்கள். ஆனபோதும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜ்க்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடியாக நடக்கப்போகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது குழுவை தற்போது அறிவித்துள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத்தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத்தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச்செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.