அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் |

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் தெலுங்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர்டிஐ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
இந்த படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கருடன் ஒரு தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேருக்கு நேர் மோதுவது தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவே ஈடி.வி.வின் சேனலின் ஓடிடி தளத்தில் நேற்று (செப் 26) முதல் ஒளிபரப்பாகி உள்ளது.