தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

உலக அளவில் பெருமை மிகுந்த திரைப்பட விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் திரைப்பட விருதுகள். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தைத் தேர்வு செய்துள்ளனர். சிறந்த சர்வதேசத் திரைப்பட விருதுக்கான பிரிவில் அந்தப் படம் கலந்து கொள்ளும்.
இதுகுறித்து தேர்வுக்கான தலைவர் என் சந்திரா கூறுகையில், “இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ள பல மொழிகளிலிருந்து 24 படங்கள் போட்டியிட்டன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்தது சிரமமான ஒன்றாக இருந்தது. நாங்கள் நீதிபதிகள் அல்ல, கோச்கள். நாங்கள் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதில் இருந்தோம்,” என்றார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் அடங்கிய குழு அந்தத் தேர்வில் இருந்தனர்.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோகர், அதார் பூனாவாலா தயாரிப்பில் உருவான 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெவாத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த வாரம் செப்டம்பர் 26ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் கதை. சிறு வயது முதலே சிறந்த நண்பர்களான ஷோயிப் (இஷான் கட்டர்), ஒரு முஸ்லிம், மற்றும் சந்தன் (விஷால் ஜெத்வா), ஒரு தலித், ஆகியோர் வறுமை மற்றும் பாகுபாட்டிலிருந்து தப்பிக்க அரசு வேலைகளைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். போலீஸ் வேலையில் சேர்வது தங்களுக்கு கண்ணியத்தை அளித்து பாரபட்சத்திலிருந்து பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் விண்ணப்பங்களுக்கு ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் வராததால் அவர்களின் பயணம் நிச்சயமற்றதாக மாறுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் படம் இது.




