கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்காக விலை உயர்ந்த கார்கள், வீடுகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6 மாடி வீடு ஒன்றை கட்டி உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த பிரமாண்ட வீட்டில் விரைவில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்பீர் கபூர் வீடு கட்டி இருக்கும் இடம், 1980களில் அவரது அப்பா ரிஷி கபூருக்கு, தாத்தா ராஜ் கபூர் குடும்ப சொத்தாக இருந்தது. பின்னர் கபூர் குடும்ப வாரிசு என்ற அடிப்படையில் ரன்பீர் கபூருக்கு கிடைத்த இடத்தில் இந்த வீட்டை கட்டி உள்ளனர். மும்பையில் அம்பானியின் வீட்டிற்கு அடுத்த மதிப்பு மிக்க வீடாக இது கருதப்படுகிறது.




