இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். ஒருபக்கம் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானாலும் அதிலிருந்த போராடி மீண்ட ரவீணா, தற்போதும் படங்களில் தொடர்பு நடித்து வருகிறார். தற்போது கேஜிஎப் 2 படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டும் விதமாக ராமிகா சென் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்விராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது ஜன கண மன படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மம்தா மோகன்தாசும் அவருடன் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வில் நடிகை ரவீனா டாண்டனை சந்தித்த மம்தா மோகன்தாஸ் ஒரு ரசிகையாக மாறிப்போய் அவருடன் சந்தோசமாக உரையாடியதுடன் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.