தமிழக அரசு திரைப்பட விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

சமீபத்தில் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அதற்கு மேல் முடியாது என்கிற காரணத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். இப்போது வரை பாலிவுட்டில் இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் பரவி தான் வருகிறது.
தற்போது ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த வித்யா பாலனிடம் தீபிகா படுகோனின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியதாவது, "தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள் வேலை, நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது. அவை நியாயமான உரையாடல்கள் என்று நான் கருதுகிறேன்.
குழந்தைகள் பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. ஏனெனில், நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர படப்பிடிப்பில் பணிபுரிய முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.




