வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கிராமிய பாடல்களால் மக்களை மகிழ்வித்து வந்த செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினரை ஊடக வெளிச்சத்தால் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் டிவி. சூப்பர் சிங்கர் ஆறாவது சீசனில் கணவன் மனைவியாக செந்திலும் ராஜலட்சுமியும் போட்டியில் நுழைந்தனர். அதுவரை வெகுஜன ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத அவர்களது நாட்டுப்புற மக்களிசை பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியை கச்சிதமாக செய்தது விஜய் டிவி. அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கள், சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு, விளம்பர படங்கள் என அடுத்தடுத்த வளர்ச்சி பாதையை நோக்கி சென்றனர் தம்பதிகள் இருவரும். அதிலும் செந்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி படம் ஒன்றிலும் நடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக செந்தில் - ராஜலட்சுமி இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வருகின்றனர். இதயத்தை திருடாதே சூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் செந்தில் ராஜலட்சுமி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதனை வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமி தங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.