இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இரண்டு எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் விஜே பார்வதி. ஜி தமிழ் டிவியின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சர்வைவர் ரியாலிட்டி ஷோ கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இதுவரை இரண்டு எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே பார்வதியின் செயல்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் மரம் வெட்ட சென்ற இடத்தில் அம்ஜத்துடன் சண்டையிட்டடார். ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்து கேமரா வரும்போது மட்டும் நீங்க வேலை செய்றீங்களா? என்று வம்பிழுத்தார். ஒரு சமயத்தில் பார்வதி கீழே விழ நான் கீழே விழும்போது சிரிப்பீங்களா என்று மீண்டும் ஸ்ருஷ்டி டாங்கேவிடம் பஞ்சாயத்தை கூட்டினார். தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கிலும் தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதாது தலைவராக இருக்க ஒரு அணியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என திடீர் தீடீரென ட்விஸ்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜே பார்வதியை விமர்சித்து வருகின்றனர். மேலும் சர்வைவர் டீமில் பார்வதி தான் அடுத்த வனிதா என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.