இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தீபிகா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் அதிகமானது. இந்த பிரச்னை கடந்த 3 மாதங்களாகவே இருந்து வருகிறது. நானும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தேன். ஆனால் சரியாகவில்லை. தொலைக்காட்சி நிறுவனமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் எனக்கு மிகவும் சப்போர்டிவாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் எனக்கு ட்ரீட்மெண்ட் முடியாததால் நான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.
தற்போது தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி நடித்து வருகிறார்.