சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தீபிகா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் அதிகமானது. இந்த பிரச்னை கடந்த 3 மாதங்களாகவே இருந்து வருகிறது. நானும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தேன். ஆனால் சரியாகவில்லை. தொலைக்காட்சி நிறுவனமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் எனக்கு மிகவும் சப்போர்டிவாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் எனக்கு ட்ரீட்மெண்ட் முடியாததால் நான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.
தற்போது தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி நடித்து வருகிறார்.




