ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன் குமார். சில பல படங்களில் நடித்து விட்டு தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். எல்லோரும் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகும்போது தமன்குமார் மட்டும் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.
அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன். ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இன்னொரு பக்கம் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடித்ததை விட இப்போது அதிக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறேன். வானத்தை போல தொடரில் நான் நடித்து வரும் சின்ராசு கேரக்டரை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானது தான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இணைந்து பயணிக்க தீர்மானித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது எனக்கு இரு கண்கள் மாதிரி. என்கிறார் தமன்குமார்.




