‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன் குமார். சில பல படங்களில் நடித்து விட்டு தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். எல்லோரும் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகும்போது தமன்குமார் மட்டும் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.
அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன். ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இன்னொரு பக்கம் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடித்ததை விட இப்போது அதிக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறேன். வானத்தை போல தொடரில் நான் நடித்து வரும் சின்ராசு கேரக்டரை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானது தான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இணைந்து பயணிக்க தீர்மானித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது எனக்கு இரு கண்கள் மாதிரி. என்கிறார் தமன்குமார்.