பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
கொரோனா காலத்திற்கு பிறகு நெடுந்தொடர்களின் படப்பிடிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்படுவதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதன் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் நெடுந்தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எல்லா சேனல்களும் தாங்கள் ஒளிபரப்பிய முன்னணி நெடுந்தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து தங்களது புட்டேஜ் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த 1ந் தேதி முதல் வாணி போஜன், கிருஷ்ணா நடித்த தெய்வமகள் மறு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
அதேபோல திலீப்ராயன், விஜயலட்சுமி நடித்த நாயகி தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதேபோன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடர் கடந்த 1ம் தேதி முதல் மறு ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் ஐஷ்வர் ரகுநாதன், அன்சு ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.