தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கொரோனா காலத்திற்கு பிறகு நெடுந்தொடர்களின் படப்பிடிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்படுவதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதன் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் நெடுந்தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எல்லா சேனல்களும் தாங்கள் ஒளிபரப்பிய முன்னணி நெடுந்தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து தங்களது புட்டேஜ் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த 1ந் தேதி முதல் வாணி போஜன், கிருஷ்ணா நடித்த தெய்வமகள் மறு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
அதேபோல திலீப்ராயன், விஜயலட்சுமி நடித்த நாயகி தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதேபோன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடர் கடந்த 1ம் தேதி முதல் மறு ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் ஐஷ்வர் ரகுநாதன், அன்சு ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.