‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கொரோனா காலத்திற்கு பிறகு நெடுந்தொடர்களின் படப்பிடிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்படுவதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதன் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் நெடுந்தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எல்லா சேனல்களும் தாங்கள் ஒளிபரப்பிய முன்னணி நெடுந்தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து தங்களது புட்டேஜ் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த 1ந் தேதி முதல் வாணி போஜன், கிருஷ்ணா நடித்த தெய்வமகள் மறு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
அதேபோல திலீப்ராயன், விஜயலட்சுமி நடித்த நாயகி தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதேபோன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடர் கடந்த 1ம் தேதி முதல் மறு ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் ஐஷ்வர் ரகுநாதன், அன்சு ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.