சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
திரைப்படங்களுக்கு நிகராக ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தியேட்டர்களில் வெளியாகும் படங்கள்கூட ஓடிடி தளத்தில் 60 நாட்களுக்குள் வெளியாகிறது. தியேட்டரில் வெளியாகும்போது நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகிறது. இதுதவிர ஓடிடிக்கென்று தயாராகும் படங்கள், தொடர்களில் ஆபாச காட்சிகள் கணிசமாக இடம்பெறுகிறது. ஆபாச வசனங்களும் இடம் பெறுகிறது. இதற்காகவே ஓடிடிக்கு செல்லும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
திரைப்படங்கள் போன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓடிடி படங்கள், தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இன்றைய காலக்கட்டத்தில் ஓடிடி தளங்கள் முக்கிய பொழுதுபோக்கு வழியாக மாறி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்களும், திரைப்படங்களும் வெளியாகின்றன. தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களை கண்காணிக்கவோ, தணிக்கை செய்யவோ எந்தவொரு அமைப்பும் இல்லை.
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், மொழிமாற்றம் செய்யப்படும் வெப் தொடர்களில் வரும் உரையாடல்கள் ஆபாசம் நிறைந்தவையாக, அருவருக்கத்தக்க காட்சிகளுடன் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ளன. எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை கண்காணித்து, தணிக்கை செய்த பிறகே வெளியிட அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்டபிறகு, "இந்த வழக்கு பொதுப்படையாக தொடரப்பட்டுள்ளது. எந்த வெப் தொடர் அல்லது எந்த திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் உள்ளன என்பதை மனுவில் குறிப்பிடவில்லை. எனவே, மனுதாரர் இதுதொடர்பாக மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையாக மனுவை அளித்து நிவாரணம் கேட்டு முறையிடலாம்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.