அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் |

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் இடம் பெற்ற பரோட்டோ சூரி காமெடியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. அந்த காமெடியில் சூரிக்கு பரோட்டா சப்ளை செய்பவராக நடித்தவர் முருகேசன். இவர் பிற்காலத்தில் பரோட்டோ முருகேசன் என அழைக்கப்பட்டார். பல படங்களில் சின்ன, சின்ன கேரக்டரில் நடித்தார்.
தற்போது சுகவனம் இயக்கத்தில் இவர் கதைநாயகனாக நடித்துள்ள படம் 'ஒண்டிமுனியும், நல்ல பாடனும்'. கோவை கிராமப்புற பின்னணியில் இந்த கதை நடக்கிறது. தனது குல தெய்வமான ஒண்டிமுனிக்கு, நல்லபாடன் என்ற முருகேசன் கிடாய் நேர்ந்து விடுகிறார். இரண்டு பண்ணையார் பிரச்னை, ஈகோ காரணமாக அவரால் கிடாய் வெட்டி பூஜை நடத்த முடியவில்லை. அவர் என்னென்ன பாடு படுகிறார் என்ற ரீதியில் படம் செல்கிறது.
பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம், கொங்கு பின்னணி, வட்டார வழக்கு, திரைக்கதை, நடிப்பு, கரு போன்ற காரணங்களுக்காக பலரால் பாராட்டப்பட்டுள்ளது. பல விருதுகளை அள்ளும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அர்ஜூனிடம் பல படங்களில் உதவியாளராக இருந்த சுகவனம் இயக்கியுள்ளார். சினிமா ஆசையில் ஒரு கட்டத்தில் சென்னையில் சுற்றி, இப்போது கோவையில் உரக்கடை வைத்திருக்கும் கருப்பசாமி என்பவர் தயாரித்துள்ளார்.