இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகுந்த வீடு என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்திரா சவுந்திர ராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்த தொடரை நித்தியானந்தம் இயக்குகிறார். கதைப்படி, தமிழாசிரியர் ராமநாதனின் ஒரே மகள் ராதா. தன் மனைவியை ராதா குழந்தையாக இருக்கும்போதே இழந்து விட்ட ராமநாதன் ஒரு தாயாய், தந்தையாய் ராதாவுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாய் அந்த திருமணம் தடைபட்டு மண மேடையில் மாப்பிள்ளையை போலீஸ் கைது செய்கிறது.
இந்த நிலையில் திருமணத்துக்கு வந்திருக்கும் தாசில்தார் ஜாதகக் கோளாறுள்ள தன் மகன் விசுவநாதனை இதுதான் சந்தர்ப்பம் என்று மேடையேற்றி தாலிகட்டச் செய்கிறார். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் ராதா, வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழ நேரிடுகிறது. இருப்பினும் தன் தந்தையின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள். ராதா சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்நோக்கி நடை போடுகிறாள் என்பது கதைக்களம். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்தொடர், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.