ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பானு. அதன் பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தேசிங்கு ராஜா, பொன்னர் சங்கர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். 20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்திரகுமாரி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார், தயாரித்து நடித்து வந்த வாணி ராணி தொடர் 1700 எபிசோட்களுடன் இன்று முடிவடைகிறது. இதையொட்டி அவர் தயாரித்து 7 வேடங்களில் நடிக்கும் சந்திரகுமாரி தொடர் நாளை மறுநாள் (10ந் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது.
இது பிரமாண்ட சரித்திர தொடர் ஆகும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் தாமிரபரணி பானு, ராதிகாவின் மகளாகவும், இளவரசியாகவும் நடிக்கிறார். இவர்களுடன் நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு, தற்போது தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.