ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஷால் முன்னணி தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது நெருக்கமான தோழி வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியில் உன்னை அறிந்தால் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வருகிற 14ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. இதுகுறித்து வரலட்சுமி கூறியிருப்பதாவது:
மற்றவர்கள் இந்த சமூகத்திற்கு என்று செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். வாருங்கள் இந்த சமூகத்தை மாற்றுவோம். நம்முடன் இந்த உலகமும் மாறும். உன்னை நீ அறிந்தால் அதுதான் சமூக மாற்த்திற்கான முதல்படி என்று தெரிவித்திருக்கிறார்.
வரலட்சுமி, சேவ் சக்தி என்ற பெண்கள் அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அதற்கான தீர்வும் இருக்கும் என்று தெரிகிறது. விஷால் நிகழ்ச்சி நடத்தும் சேனலுக்கு எதிர் சேனலில் வரலட்சுமி நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.