ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது புதிதில்லை. மார்க்கெட் இழந்து நடுத்தர வயதை தாண்டிய பிறகுதான் வருவார்கள். ஆனால் இப்போது இளம் நடிகைகளை சினிமாவிலிருது சின்னத்திரைக்கு வருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வந்திருக்கிறார் வித்யா. நாயகி தொடரின் நாயகியாக நடிக்கிறார்.
சைவம் படத்தின் மூலம் அறிமுகமான வித்யா, அதன் பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான களரி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது தயாரிப்பில் உள்ள தடம், மாரி 2ம் பாகத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் அறிமுகமாகி சிவராஜ்குமார் ஜோடியாகவும் நடித்தார்.
வித்யா தொடர்ந்து நடித்தாலும் அவருக்கு சோலோ ஹீரோயின் வாய்ப்பு அதிகமாக அமையவில்லை எனவே சீரியலுக்கு வந்து விட்டார். ராணுவ குடும்பத்து பொண்ணு, விஞ்ஞானம் படித்து விட்டு, மாடலிங் துறைக்கு வந்து, விளம்பர படத்தில் நடித்து, சினிமாவில் நடித்து, இப்போது சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.