ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், மறைந்த என்எஸ்.கிருஷ்ணனின் பேத்தியான ரம்யாவும் பங்கேற்றிருந்தார். சினிமாவில் பாடகியாக வலம் வரும் இவர், பிக்பாஸில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் உடன் வலம் வந்தார்.
ஒருமாதம் நிகழ்ச்சியில் தாக்குபிடித்தவர், கடந்தவாரம் வெளியேற்றப்பட்டார். இது நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் அதிருப்தியை தந்தது. ரம்யா மீது பெரியளவில் குற்றச்சாட்டுகள் இல்லை, மற்றவர்கள் போன்று புறம் பேசுவது, விதிகளை மீறுவது என எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனபோதும் ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் இவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறியது மகிழ்ச்சி என ரம்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது...
பிக்பாஸில் இவ்வளவு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, அதற்காக முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நானாக இருக்கவே விரும்பினேன். பிக்பாஸை விட்டு வெளியேறியதை எண்ணி நிறையபேர் வருத்தப்பட்டுள்ளார்கள். உண்மையாக சொல்கிறேன், நான் வெளியேறியது மகிழ்ச்சி தான். இதற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. அங்கு ஒரே சண்டை, போட்டி, புறம்பேசுவது என தொடர்கிறது. நீங்கள் பார்ப்பது ஒரு மணிநேரம் தான், ஆனால் 24 மணிநேரமும் நாங்கள் அனுபவித்து வந்தோம். நான் வெளியேறியதை எண்ணி நீங்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இவ்வாறு ரம்யா கூறியுள்ளார்.