ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாரை கடுமையாக விமர்சித்து போலீஸ் உடையிலேயே சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக வடபழனி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
குன்னூரில் நேற்று முன்தினம் நிலானியை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக அவரிடம் வடபழனி காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் வாக்குமூலத்தில் நிலானி தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
எனக்கு சொந்த ஊர் தஞ்சை. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காகவே சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என சமூக பிரச்னைக்கான போராட்டங்களில் தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடினேன். கடைசியாக ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனாலும் என்னை பற்றி பெரிய அளவில் பொதுமக்கள் பேசவில்லை.
இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் போது போலீஸ் சீருடையிலேயே பேசிய வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டேன். என்னை பற்றி மக்கள் பரவலாக பேச வேண்டும் என்பதற்காகத்தான் வீடியோவை பதிவு செய்தேன். மேலும், பட வாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். காவல் துறை பற்றி தவறாக பேசும் எண்ணம் எனக்கு இல்லை, என்று அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது.