சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பெரிய திரையில் பெண் போலீஸ் என்றால் விஜயசாந்தி நினைவுக்கு வருவதைப்போல சின்னத்திரையில போலீஸ் என்றால் நினைவுக்கு வருகிறவர் தேவிப்ரியா. பெரும்பாலான தொடர்களில் அவர் போலீசாகத்தான் நடித்திருக்கிறார். ஆசைகள் தொடரில் போலீசாக நடித்தவர், தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களில் நடித்தார். உயரமும், திடகாத்திரமான தோற்றமும் அவருக்கு போலீஸ் வேடங்களை பெற்றுக் கொடுத்தது. அச்சம் மடம் நாணம், சொர்க்கம், பாரதிராஜா இயக்கிய தெலுங்கு சீரியலான நாயுடம்மா, அத்திப்பூக்கள் ஆகிவயற்றில் தேவி பிரியா நடித்த போலீஸ் கேரக்டர்கள் மிகவும் பிரபலம்.
சினிமாவிலும் தேவிப்ரியாவுக்கு கிடைத்தது போலீஸ் கேரக்டர்தான். நாயகன், விஞ்ஞானி என இரண்டு படங்களில் போலீசாக நடித்தவர். தற்போது ஜெகன்நாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படத்திலும் போலீசாக நடித்து வருகிறார். மற்ற பட கேரக்டருக்கும், இந்த பட போலீஸ் கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் அவர் காக்கி யூனிபார்ம் அணியாமல், ஜீன்ஸ், டீசர்ட் என்று மார்டன் போலீசாக வந்து கலக்குகிறாராம்.