சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
குழந்தை நட்சத்திரமாக சினிமா, சின்னத்திரைகளில் நடித்து வந்தவர் கல்யாணி. ஒருகட்டத்தில் பூர்ணிதா என்று பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்தவர், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான கல்யாணி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே சீரியல் மற்றும் தொகுப்பாளினி வாய்ப்புகளுக்காக முயற்சி எடுத்து வந்த அவருக்கு தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சீனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சீரியல்களில் நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுத்து வரும் கல்யாணி, தனது கணவர் ரோஹித்தும் தன்னை என்கரேஜ் பண்ணுவதால் சின்னத்திரையில் தொடர்ந்து பங்களிக்க முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்.