சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே சுமங்கலி தொடரின் எபிசோடுகள் நகர்த்தப்பட்டு வந்தன. அதோடு, பிரதீப் நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலணையும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுஜித் என்ற கன்னட சீரியல் நடிகர் சுமங்கலி தொடரில் பிரதீப் நடித்து வந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.