சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் தன்னை தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதாக நித்யா ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால் பாலாஜி நாங்கள் ஒற்றமையாகத்தான் இருக்கிறோம் என்று இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவுடன் இன்னொரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனுவில் உண்மை இருக்கும் பட்சத்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.