ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குஷ்பு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடரில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாராகும் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்தில் டப் செயப்பட்டு வருகிறது. மேலும், இந்த நந்தினி சீரியல் தவிர அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலிலும் தற்போது லீடு ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார் மாளவிகா வேல்ஸ்.
மேலும், மலையாளத்தில் தான் நடித்துள்ள சீரியல்களில் இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளாராம் மாளவிகா. ஆனால் இந்த நந்தினி சீரியல் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறாராம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடை பெறுவதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைப்பதில்லையாம்.
அது மட்டுமின்றி நந்தினி சீரியலில் நடிப்பதால் அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் அம்முவின்டே அம்மா சீரியலுக்கும் டப்பிங் பேச அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லையாம். இதனால் தாய்மொழியான மலையாளத்தில் வெளியாகும் நேரடி தொடரிலும் தனக்கு வேறு நபர் டப்பிங் கொடுத்திருப்பதால் மனதளவில் வருத்தத்தில் உள்ளாராம் மாளவிகா வேல்ஸ்.