சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வாணி ராணியில் வில்லனாக நடித்த ஜெயராமன், தாமரை சீரியலில் பாசிட்டீவ்-நெகடீவ் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த வாய்ப்பு வாணி ராணி சீரியலில் எனது பர்பாமென்ஸைப்பார்த்துதான் கொடுத்தார்கள் என்கிறார் ஜெயராமன்.
தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
ஏற்கனவே பல சீரியல்களில் நான் நடித்துள்ளேன். குறிப்பாக, ராதிகாவின் ரடான் டிவி எனது தாய் வீடு மாதிரி. அவர்களின் பல சீரியல்களில் நான் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளேன். அந்த வகையில், வாணிராணியில் ஒரு அழுத்தமான வில்லன் வேடம் கிடைத்தது. அந்த சீரியலில் எனது பர்பாமென்ஸைப் பார்த்துதான் தாமரை சீரியலில் வில்லன் வேடத்துக்குஅழைத்தார்கள். பின்னர் இன்னொரு பாசிட்டீவ் வேடமும் கொடுத்தர்கள். ஆக, இப்போது தாமரை சீரியலில் பாசிட்டீவ்-நெகடீவ் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறேன்.
அதோடு, வாணி ராணியில் இருந்து தாமரை சீரியலில் மாறுபட்ட வில்லன் வேடம். கதைச்சூழலும், பிரச்சினைகள், கேரக்டரின் தன்மையும் வெவ்வேறாக இருப்பதால் ஒரு கேரக்டரின் சாயல் இன்னொரு கேரக்டரில் தென்படாத வகையில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். குறிப்பாக, வில்லன் வேடத்தில் பணக்கார திமிர் பிடித்தவனாக ஆடம்பரமாக அவனுக்கே உரிய கெத்துடன் நடித்த நான், பாசிட்டிவ் ரோலில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவனாக எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். இதனால் இரண்டு வேடங்களுக்குமிடையே பெரிய வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறேன். பெரும்பாலும் வில்லனை நேயர்கள் திட்டுவார்கள். ஆனால் தாமரை சீரியலில் பாசிட்டிவ், நெகடீவ் என்ற இரண்டு வேடங்களில் நடிப்பதற்கும் எனக்கு நேயர்கள் மத்தியில் நல்லபெயர் கிடைத்து வருகிறது.
அதோடு, நான் எந்த வேடங்களுக்காகவும் முன்னணி நடிகர்களை ரோல்மாட லாக கொள்வதில்லை. எதுவாக இருந்தாலும் என்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளிடமிருந்துதான் எனக்கு பிடித்தமான விசயங்களை எடுத்துக்கொள்வேன். மேலும், என்னைப்பொறுத்தவரை இவர் இந்த மாதிரியான வேடங்க ளுக்கு மட்டும்தான் பொருத்தமாக இருப்பார் என்பதில்லாமல் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதேபோல் அடுத்தகட்டமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
எந்த கதாபாத்திரத்திற்காகவும் நான் தனிப்பட்ட முறையில் ஹோம் ஒர்க் செய்வதில்லை. இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களே அதை உள்வாங்கித்தான் நடிக்கிறேன். என்னை நடிக்க வைப்பது டைரக்டர்கள்தான். அதனால் எனக்கு கிடைக்கும் எல்லா புகழும் அவர்களைத்தான் சேரும் என்று கூறும் ஜெயராமனுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் உள்ளதாம். அதற்கான முயற்சியில் தான் விரைவில் ஈடுபட உள்ளதாகவும் சொல்கிறார்.