சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வம்சம் சீரியலில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா. இந்த கேரக்டர் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுவதாக இருப்பதால் நேயர்களை பெரிதாக கவர்ந்து விட்டது. அதனால், அவரை சந்திக்கும் நபர்கள் மற்றும் நேயர்கள் அனைவருமே ஜோதிகா என்று அந்த கேரக்டரை சொல்லித்தான் அழைக்கிறார்களாம். அதனால் பிரியங்கா என்ற தனது பெயரை மாற்றி இனிமேல் ஜோதிகா என்ற பெயரிலேயே சின்னத்திரை தொடர்களில் நடிக்கப் போகிறாராம் அவர்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், வம்சம் சீரியலுக்கு முன்பு நான் பல தொடர்களில் நடித்தேன். ஆனால் அந்த சீரியல்களெல்லாம் வாங்கித்தராத பெயரை இந்த வம்சம் சீரியல் பெற்றுத்தந்துள்ளது. இந்த தொடரில் முதலில் நான் ஜோதிகாவாக பாசிட்டீவ் ரோலில்தான் நடித்தேன். பின்னர் கதையோட்டம் மாறும்போது வேதிகா என்ற இன்னொரு வேடத்திலும் நடித்தேன். நெகடீவாக சித்தரிக்கப் பட்ட அந்த வேடமும் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது. அதோடு எனக்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. இப்போது அந்த நெகடீவ் வேடம் இடம்பெறவில்லை. அதனால் மறுபடியும் நான் ஜோதிகா என்ற பாசிட்டீவ் வேடத்தில் நடித்து வருகிறேன்.
அதோடு, தொடர்ந்து நான் வில்லி வேடங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வமாக இருக்கிறேன். காரணம் பத்து கேரக்டர்கள் இருந்தாலும் அந்த வில்லி வேடம் தான் கதையை நகர்த்தி செல்லும். அதனால் அனைவரது கவனமும் அந்த வில்லி வேடத்தின் மீதுதான் இருக்கும். நேயர்கள் அந்த வேடத்தை திட்டினாலும் நடிப்பவர்களை பொறுத்தவரை நல்ல தீனி போடும் வேடமாகவே அமைகிறது. அதனால்தான் நான் நெகடீவ் வேடங்களில் நடிப்பதை அதிகமாக விரும்புகிறேன்.
மேலும், தற்போது நான் வானவில் டிவியில் அன்புடன் வானவில் என்ற லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். அப்போது பேசும் நேயர்கள், என்னை ஜோதிகா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த கேரக்டர் தமிழ் கலாச்சாரம் சம்பந் தப் பட்ட கேரக்டராக இருப்பதினால்தான் அது அனைவருக்கும் பிடித்து விட்டது. அதனால் மக்களுக்கு பிடித்தமான ஜோதிகா என்ற அந்த பெயரில் இனிமேல் நான் தொடர்களில் நடித்து சின்னத்திரை ஜோதிகாவாக திகழப்போகிறேன் என்கிறார் பிரியங்கா.