அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் அடங்கும்.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றவர் பின்னர் நடித்தார். தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
தற்போது செய்தி சேனல்கள் பெருகிவிட்டது. புதிது புதிதாக செய்தி வாசிப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டைலுடன் செய்தி வாசிக்கிறார்கள். இந்த இளம் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவிக்க விரும்பிய பாத்திமா பாபு, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.