சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்.சி. இப்போது அவர் பரபரப்பாக படங்களில் நடிப்பதில்லை. படத்தயாரிப்புக்கும் பிரேக்விட்டிருக்கிறார். 'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தற்போது 'சங்க மித்ரா' என்ற படத்தை இயக்குகிறார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இது சுந்தர்.சிக்கு இலட்சிய படமாம். எனவே அந்தப் படத்தின் பிரீ புரடக்ஷன் பணியில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவரை நம்பி பல கோடி ரூபாயை கொட்டி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். காரணம் இது அவர்களது 100வது படம். எனவே தான், ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ்பதிப்பில் சூர்யா நடிக்க மறுத்தவிட்டதால், தற்போது ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளில் பிரம்மாண்ட படம் என்பதால் இரண்டு வருடம் ஆகும் என்பதால், கிடைக்கும் இடைவெளியில் டிவி சீரியல் தயாரிப்பு ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் சுந்தர்.சி.
நான்கு தென்னிந்திய மொழிகளில் இந்த சீரியல் உருவாகிறது. 'தேவ சேனா' என இந்த டிவி சீரியலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறாராம். இந்த மெகா ஹாரர் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகிறது.