சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ், தெலுங்கு மொழியில் 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர் ரோஜா. மாநிற அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் அப்படியே சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார். லக்கா திக்கா, ஜீன்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது தெலுங்கு சேனலில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்தி தொகுப்பாளினி ஆனது ஏன் என்பது பற்றி ரோஜா கூறியதாவது:
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தென்னிந்தி சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்து விட்டேன். ஒரு பெண் கடைசி வரை ஹீரோயினாக தொடர முடியாது. அடுத்த கட்டமாக அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்கள்தான் கிடைக்கும். சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டு ஏன் மிச்சத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் சின்னத்திரை பக்கம் வந்தேன். சில படங்களில் வில்லியாக நடித்தேன். அது ஒரு மாற்றாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து வில்லியாக நடிக்க விருப்பம் இல்லை. அதனால்தான் டி.வி.பக்கம் வந்துவிட்டேன்.
சின்னத்திரை மூலமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் சென்று வருகிறேன். இது ஒரு புதுமையான அனுபவம். வெவ்வேறு மனிதர்களை சந்திக்கிறேன். வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டத்தையும், தோற்றவர்களின் வலியையும் நேரடியாக பார்க்கிறேன். இது வாழ்க்கைக்கு நிறைய கற்றுத் தருகிறது. என்கிறார் ரோஜா.