சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சேனல்களில் டப்பிங் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வந்த முன்னணி சேனல்களும் டப்பிங் சிரியலை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டது. இதனால் பல நெடுந்தொடர்கள் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. தமிழ் சீரியல்களை சீக்கிரம் முடித்துவிடும்படி சீரியல் தயாரிப்பாளர்களை முன்னணி சேனல்கள் வற்புறுத்த தொடங்கி உள்ளது.
இதனால் தமிழ் சீரியல்களை நடிக்கும் நடிகர் நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள். டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை கண்டித்தும், தமிழ் சீரியல்களுக்கு மக்களிடம் ஆதரவு வேண்டியும், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்புள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக வருகிற 14ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு பிரமாண்ட உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போராட்டத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். பல திரைப்பட சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் என்று தெரிகிறது.