சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
மலையாள சீரியல்களில் நடித்து வந்த நான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில்தான் தமிழுக்கு வந்தேன். முதல் தொடரிலேயே நல்லதொரு வேடத்தில் நடித்ததால் அந்த தொடரே என்னை பிரபலப்படுத்தியது. அதையடுத்து வசந்தம், மகள், சொந்த பந்தம் தொடர்களில் நடித்த நான் இப்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறேன்.
இந்த பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கேரக்டருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடீவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன். அதனால்தான் தெலுங்கில் நடித்து வந்த மமதலா கோவேடா தொடருக்குப்பிறகு இப்போது தமிழில் பாசமலர் தொடரில் மட்டுமே நடிக்கிறேன். சில சீரியல்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது மறுத்து விட்டேன்.
இதற்கு காரணம் ஒரு சீரியல் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் அதில் நான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இடையில் வந்து இடையில் போவது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் சந்திரா லட்சுமண், ஏற்கனவே மனசெல்லாம், ஏப்ரல் மாதத்திலே, தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்திருப்பவர், நல்ல வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பாராம்.