சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி, அம்மா டான்சர். அப்பா கப்பல் கேப்டன். சினிமாவில் பூர்ணிதா என்ற பெயரில் அறிமுகமானா£ர். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஹீரோயினியாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் கல்யாணி என்ற தனது இயற்பெயரிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்தார். அண்ணாலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், தொடர்களில் நடித்தார். பீச் கேர்ள் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். இது 350 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வாழ்ந்த அவர்கள் கடந்த மாதம் பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார்கள். அங்கிருந்து வந்து ஆண்டாள் அழகர் தொடரில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் கணவருடன் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். கன்னட தொடர்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் கல்யாணி.