நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி, அம்மா டான்சர். அப்பா கப்பல் கேப்டன். சினிமாவில் பூர்ணிதா என்ற பெயரில் அறிமுகமானா£ர். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஹீரோயினியாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் கல்யாணி என்ற தனது இயற்பெயரிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்தார். அண்ணாலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், தொடர்களில் நடித்தார். பீச் கேர்ள் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். இது 350 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வாழ்ந்த அவர்கள் கடந்த மாதம் பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார்கள். அங்கிருந்து வந்து ஆண்டாள் அழகர் தொடரில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் கணவருடன் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். கன்னட தொடர்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் கல்யாணி.