பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பலமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் எங்க வீட்டுப்பெண். வாழ்க்கையை கனவுகளோடு எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர் சுமித்ரா. அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தந்தை கலெக்டர். திடீரென அவர் கட்டுப்பாட்டில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிவரும் ஒரு பலமாடி கட்டிடம் இடிந்து விழுகிறது. கலெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். சுமித்ராவின் திருமணம் நின்று போகிறது. நன்றாக இருந்த குடும்பம் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வருகிறது.




