அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
டப்பிங் தொடர்களால் எங்களது வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. என்றாலும் எல்லா சேனல்களுமே டப்பிங் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. பொதுவாக புகழ்பெற்ற நேரடி தமிழ் தொடர்கள்தான் மறு ஒளிபரப்பாகும். அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான தொடர் நான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும்.
ஆனால் முதன் முறையாக ஒரு டப்பிங் தொடர் மறுஒளிபரப்பாகிறது. அதுவும் ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது உள்ளம் கொள்ளை போகுதடா என்ற டப்பிங் தொடர். பாலிமர் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான இந்த தொடர் 650 எபிசோட்களை கொண்டது. அத்தனை எபிசோடும் மறு ஒளிபரப்பாகிறது. ராம்கபூர், சாக்ஷி தன்வார், ஈவா க்ரோவர், ரேணுகா இஸ்ராணி நடித்துள்ளனர்.