சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை சேனல்களில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவது அதிகரித்து உள்ளது. இதனால் நேரடி சீரியல் தயாரிப்பது குறைந்து விட்டது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் சின்னத்திரையில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமான சீரியல்களை இயக்கிய முன்னனி சீரியல் இயக்குனர் பாலாஜி யாதவ் வேலை வாய்ப்பு இல்லாமல் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிற்று கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் பாலாஜி யாதவிற்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பலரும் டப்பிங் சீரியலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் நாளை (ஏப் 15) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அன்று ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்பு உள்பட வேறு எந்த பணிகளும் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் பெப்சி அமைப்பு இணைந்து இதனை நடத்துகிறது.
நாளை காலை 9.30 மணிக்கு சின்னத்திரை கலைஞர்கள் சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் கூடுகிறார்கள். பின்பு அங்கிருந்து ஊர்வலமாக ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சென்று டப்பிங் சீரியலை நிறுத்தக்கோரி மனு கொடுக்கிறார்கள்.