சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் தேவிப்ரியா. தற்போது நடித்து வரும் பாசமலர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களிலும் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். ஆனால் இனி வில்லியாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நிறைய சீரியல்களில் வில்லியாகவே நடித்து விட்டேன். என் நடிப்புக்காக பாராட்டுகள் கிடைத்தாலும் சீரியலை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளும் தாய்மார்களிடம் நான் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நானும் எத்தனை ஆண்டுகள்தான் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அதனால்தான் இனி வில்லி வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்தேன். இடையில் நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறேன். கத்துக்குட்டி, விஞ்ஞானி படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் தேவிப்ரியா.