சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஊமை விழிகள், காவியத்தலைவன், இணைந்த கைகள் போன்ற படத்தை தயாரித்த ஆபாவாணனின் மனைவி தேன்மொழி ஆபாவாணன், சின்னத்திரைக்கு சீரியல்கள் தயாரித்து வருகிறார். கங்கா யமுனா சரஸ்வதி, சம்பா ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
தேன்மொழி மீது மயிலாடுதுறையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தேன்மொழி தான் எடுத்த சீரியல்களுக்காக கேமரா, ஜெனரேட்டர், எலெக்டரிகல் லைட்டுகளை என்னிடம் வாடகைக்கு எடுத்தார். இதற்காக அவர் வாடகை தொகைக்காக 55 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். அது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. தேன்மொழியிடம் பலமுறை பணம் கேட்டும் பணம் தரவில்லை. செக்மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கில் நீலகண்டன் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் தேன்மொழி ஆஜராகவில்லை. இதனால் தேன்மொழி ஆபாவாணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார்.