சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொதிகை டிவியில், தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசை நிகழ்ச்சி வாரம்தோறும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.30 முதல் 11.55 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. , இன்று (25ம்தேதி), திருத்தணி முருகன் பற்றிய ஐந்தாவது நிறைவுப்பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இதில், மலைக்கோவிலில் உள்ள நான்கு பிரகாரங்கள், ஏனைய சன்னிதிகள், பஞ்சாட்சரப் படிகள், ருத்ராட்சமண் டபம், மூலவர் பற்றிய குறிப்புகள், கோவிலின் அமைப்பு, இங்கு ஆண்டு முழுவதும் நடக்கும் விழாக்கள், எடுக்கப்படும் காவடிகளின் சிறப்பு அமைப்பு, இங்கு நடக்கும் குஹானந்தநாதர் குருபூஜை பற்றிய செய்திகள், இத்தலத்திற்கு பாடல்கள் பாடியுள்ளவர்கள் யார் யார்? கச்சியப்ப முனிவர், கந்தப்ப தேவர் ஆகியோர் பற்றிய குறிப்புகள், கற்பூரக் கொப்பரை ஆகியவை பற்றியும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் விளக்க உரை அளிக்க, டி.வி.சுந்தரவல்லி பாடுகிறார். எஸ்.நீலகண்டன் ஒருங்கிணைப்பில், ஆடியோ வேர்ல்டு சுக்ராவிஷனின் தயாரிப்பான இந்நிகழ்ச்சியை ஜெயம்கொண்டான் இயக்கி உள்ளார்.